இந்தியாவிற்கும்-பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புகிறேன் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தலையீட்டை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிப்பது தொடர்பான தகவல்கள் இரு நாடுகளிடம் இருந்து வந்துள்ளது என டொனால்ட் ட்ரம்ப் உரை நிகழ்தியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
நான் நினைக்கிறேன் விரைவில் இது ஒரு முடிவுக்கு வரும் என்று. இது நீண்ட காலமாக நடக்கிறது. பல தசாப்தங்களாக. துரதிருஷ்டவசமாக நிறையப் பேர் உயிரிழந்துள்ளனர்.நாங்கள் இருவருக்கும் உதவி செய்ய முயற்சித்தோம்.சமாதானத்தை பெற முடியுமா என்று பாருங்கள்.அநேகமாக நடக்கும் என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.
எல்லை தாண்டிய இராணுவ தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இராணுவ நடவடிக்கைகள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ள அமெரிக்கா, பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
எனினும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது எனவும் அவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதை தடை செய்யுமாறும் பாகிஸ்தான் அரசை வலியுறுத்துவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளதாக அந்நாட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM