சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட அரிய கடல்வாழ் உயிரினங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை மண்ணடி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில், பதப்படுத்தப்பட்ட அரிய வகை கடல்வாழ் மற்றும் வன உயிரினங்கள் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. உடனே, சுங்கத்துறை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த குடோனுக்குச் சென்றனர்.
அப்போது, அதிகாரிகளைப் பார்த்ததும் அங்கிருந்த 2 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப்பிடித்த அதிகாரிகள் குடோனில் சோதனை செய்தபோது, அங்கு பெரிய பிளாஸ்டிக் பைகளில் பதப்படுத்தப்பட்ட கடல் குதிரை, குழாய் மீன்கள், சுறா மீன் குஞ்சுகள், கடல் வெள்ளரி போன்ற கடல்வாழ் உயிரினங்களும், எறும்பு திண்ணி உள்ளிட்ட வன விலங்குகளும் இருந்ததை கண்டுபிடித்தனர்.
பிடிபட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராமேஸ்வரம் மற்றும் சென்னை காசிமேடு பகுதிகளில் இருந்து இவற்றை வாங்கி மும்பை வழியாக இலங்கை, சீனா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சர்வதேச சந்தையில் இவற்றின் மொத்த மதிப்பு 7 கோடி ரூபாய் என கண்டறிந்நனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM