குவைத்தில் பணிப்பெண்களாக கடமையாற்றிய 52 பேரை இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அனுப்பி வைத்துள்ளது.
குறித்த பணிப்பெண்கள் கடமையாற்றிய வீடுகளில் பாரிய நொந்தரவுக்கும் பிரச்சினைக்கும் உள்ளான நிலையில் இன்று அவர்கள் தாய்நாடுதிரும்பியுள்ளனர்.
குறித்த பெண்கள் இன்று காலை 6.35 மணியளவில் குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்துள்ளனர்.
குறித்த பெண்களின் 6 பேர் இருவருடங்களுக்கு மேலாக குவைத்தில் பணிபுரிந்ததோடு, ஏனைய பெண்கள் அனைவரும் ஒருவருடத்திற்கு குறைவாக பணிப்பெண்களாக கடையாற்றியதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பெண்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், குறித்த பெண்கள் குவைத்தில் பணிபுரிந்த காலத்தில் எவ்வித கொடுப்பனவுகளும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த பெண்கள் தங்கியிருந்து பணிப்புரிந்த வீடுகளில் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும் தொந்தரவுக்குள்ளானதாகவும் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த பெண்களில் எட்டுப் பேரைத் தவிர ஏனைய 44 பேர் தற்காலிகமான கடவு சீட்டை பயன்படுத்தி இலங்கை வந்துள்ளதுடன் 35 பெண்கள் தமது சொந்தப் பணத்தை செலவழித்து கடவுசீட்டை பெற்று இலங்கை வந்துள்ளனர்.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வாறு குவைத்திலிருந்து வந்த பணிப் பெண்கள் அவர்களது ஊருக்கு செல்வதற்கான கொடுப்பனவுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM