இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கும் நாட்டின் வதிவிட விசாவை வழங்குவதற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
* இலங்கையில் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 10 வருடகாலம் இலங்கையில் வசிப்பதற்கான விசா அனுமதி.
* இலங்கையில் 3 இலட்சம் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 5 வருடகாலம் இலங்கையில் வசிப்பதற்கான விசா அனுமதி.
அத்துடன் வெளிநாடுகளில் குடியுரிமை அனுமதியை பெற்றுக்கொண்டதினால் இலங்கை குடியுரிமையை இழந்துள்ள நபர்களுக்கு விடயதான அமைச்சரினால் நியமிக்கப்படும் கால வரையில் நிரந்தரமாக வாழ்வதற்கான விசா அனுமதியை வழங்குவதற்காக 1948ஆம் ஆண்டு இலக்கம் 20 இன் கீழான குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தில் 14 (1) மற்றும் 14 (2) ஆகிய சரத்துக்களில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் 14(3அ) என்ற புதிய சரத்தை உள்வாங்குவதற்கான திருத்த சட்டம் சட்ட தயாரிப்பு பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்த திருத்த சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் பராளுமன்றத்தில் சமர்பிப்பதற்காக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM