அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சரிவிலிருந்து இந்திய அணியை கோலி மற்றும் தோனி இருவரும் இணைந்து மீட்டெடுத்தனர்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியானது இந்திய அணியுடன் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று ஆரம்பமானது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
அதன்படி அணி சார்பில் ராகுல் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க ராகுல் அதிரடி காட்ட ஆரம்பித்தார்.
நான்காவது ஓவரின் 4,5 ஆவது பந்துகளில் அடுத்தடுத்து இரு ஆறு ஓட்டங்களையும், அதற்கடுத்த ஐந்தாவது ஓவரின் 4,5 ஆவது பந்து வீச்சிலும் அடுத்தடுத்து இரு ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார் ராகுல்.
இதனால் இந்திய அணி 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ஓட்டங்களை பெற்றது. ராகுல் 41 ஓட்டத்துடனும், தவான் 9 ஓட்டத்துடனும் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.
எனினும் 7.1 ஆவது ஓவரில் ராகுல் 47 ஓட்டத்துடன் ஆட்மிழக்க, தவான் 9.2 ஆவது ஓவரில் 14 ஓட்டத்துடனும், அடுத்து களமிறங்கிய ரிஷாத் பந்த் 10.5 ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் விராட் கோலியும் தோனியும் களமிறங்கி துடுப்பெடுத்தாட சரிவிலிருந்த இந்திய அணி மீள ஆரம்பித்தது.
விராட் கோலி 15 ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று அடுத்தடுத்து மூன்று ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ள இந்திய அணி 16 ஓவர்களுக்கு 135 ஓட்டங்களை பெற, விராட் கோலி 16.5 ஆவது பந்தில் 29 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் விளாசினார்.
மறுமுணையில் தோனியும் 18 ஆவது ஓவரில் 2 ஆறு ஓட்டம ஒரு நான்கு ஓட்டங்களை விளாசி அதிரடி காட்ட ஆரம்பிக்க இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 19 ஆவது ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 174 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தோனி 19.1 ஆவது பந்து வீச்சில் 23 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இவரின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய தினேஸ் கார்த்தக்கும் அதிரடி காட்ட விராட் கோலி இறுதிப் பந்தில் 6 ஓட்டத்துடன் 20 ஓவர்களையும் முடித்து வைத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றது.
ஆடுகளத்தில் விராட் கோலி 72 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM