ஜனாதிபதி கொலை சதி ; வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இந்தியப் பிரஜை

Published By: Vishnu

27 Feb, 2019 | 07:53 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்யவும் மேலும் பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவதூரு பரப்பியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட  இந்திய பிரஜை அவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார். 

இதற்கான அறிவிப்பை கோட்டை பதில் நீதிவான் ஜயந்த டயஸ் நாண்யக்கார இன்று விடுத்தார். 

கடந்த 5 மாதங்களாக இந்த விவகாரத்தில் குறித்த இந்திய பிரஜை கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வந்த நிலையிலேயே இவ்வாறு அவ் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் உரிய வீசா இன்றி இலங்கையில் தங்கிருந்தமை தொடர்பில் சி.ஐ.டி. அவருக்கு எதிராக தனியான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் அது தொடர்பான விசாரணைக்காக அவர் எதிர்வரும் மார்ச் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01