காஷ்மீர், நவ்ஷரா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட இரண்டு பாகிஸ்தான் விமானங்களில் ஒன்றை இந்திய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்றைய தினம் தாக்குதலை மேற்கொண்டது.
இந்த நிலையில் 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. தாக்குதல் நடத்தும் திட்டத்துக்குள் அந்த விமானங்கள் இந்திய பகுதிக்குள் வந்திருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக பதிலடி தாக்குதலை நடத்த ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன் மற்றொரு விமானம் அங்கிருந்து தப்பிச் சென்றது.
சுட்டு வீழ்த்தப்பட்ட எப் 16 விமானம் லேம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீநகர் உட்பட காஷ்மீரில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM