பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான குஜராத்தின் கட்ச் பகுதியில் நேற்று இரவு உளவு விமானம் சுற்றித் திரிந்துள்ளது. இதைக் கண்ட இந்திய இராணுவம், அம்பாசா கிராமத்தில் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.இதைத் தொடர்ந்து விமானத்தின் பகுதிகள் உடைந்து கீழே சிதறின. இராணுவ அதிகாரிகளும் உள்ளூர் காவல்துறையும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.சேதமடைந்த விமான பாகங்களைச் சேகரித்து, அவற்றைப் பரிசோதிக்கும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது.
ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் தங்கியிருந்த பாலாகோட் தீவிரவாத முகாம் மீதான தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
ஆனால் இத்தாக்குதலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் திகதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM