கிண்ணியா, மூதூர் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்று வரும் மணல் அகழ்வுப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பான விஷேட மாநாடு கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றது.
ஆளுநர் தனது உரையில் “மிக வறுமையான நிலையிலேயே கிண்ணியாவையும் மூதூரையும் அண்டியுள்ள மக்கள் வாழ்கிறார்கள். மண் அகழும் தொழிலை நம்பி சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன.
கடந்த ஒரு மாத காலமாக மண் அகழ்வுத் தொழிலைத் தடை செய்ததையடுத்து இம்மக்கள் மிக மோசமாகப் பொருளாதாரமின்றிப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நான் உயிரிழந்த குடும்பங்களின் உறவினர்களிடம் சென்று அவர்களது நிலைமையைப் பார்வையிட்டேன்.
அவ் இரண்டு இளைஞர்களும் வறுமையில், குடிசைகளிலே வாழ்ந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
இந்த நிலைமைகள் சீராக்கப்பட வேண்டும். இருபதாயிரம் குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
நமது ஒவ்வொரு நடவடிக்கைகளும் மக்களைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். கொழும்பில் உள்ள செல்வந்தர்கள் இங்கே வந்து மண் அகழ்வில் ஈடுபடுகின்ற பொழுது பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் வறுமையோடு உள்ளார்கள். வறுமையை ஒழிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
மேலும் புவிச் சரிதவியல் திணைக்களத்தினுடைய தலைவர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஷ்பகுமார தலைமையில் இராணுவ, பொலிஸ் மற்றும் கடற்படை ஆகியவற்றைக் கொண்ட ஒரு உயர் மட்டக் குழு ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழு 3 நாட்களுக்குள் தங்களுடைய சிபாரிசுகளை எடுத்து எதிர்வரும் 28 ம் திகதி இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
மக்கள் பாதிக்கப்படாத வகையில் மக்கள் மீண்டும் மண் அகழ்வுத் தொழிலைச் செய்வதற்குத் தேவையானவற்றை ஒழுங்கு செய்து அவர்களுக்குச் சட்ட ஒழுங்குப்படி அனுமதி வழங்கி உரிய முறையிலே அவற்றைப் பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மண் அகழ்வு உத்தரவாத பத்திரம் வழங்கும்போது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மண் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குவதைத் தவிர்த்து திருகோணமலை மாவட்ட கிண்ணியா மற்றும் மூதூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆலோசனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM