அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை குவித்துள்ளது.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
2019 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அத் தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இதுவாகும்.
இந் நிலையில் இன்று மாலை 7.00 மணியளவில் விசாகப்பட்டனத்தில் ஆரம்பான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதற்கமைவாக முதலவதாக துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிசார்பில் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க ரோகித் சர்மா 2.3 ஆவது ஓவரில் 5 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதனால் இந்திய அணியின் முதல் விக்கெட் 14 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. இவரையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்காக விராட் கோலி மற்றும் ராகுல் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட ஆரம்பித்தனர்.
இதனால் இந்திய அணி 5 ஓவர்களில் 38 ஓட்டங்களையும், 6.1 ஓவரில் 50 ஓட்டங்களையும் விக்கெட் இழப்பின்றி அதிரடியாக பெற்றது. எனினும் 8.4 ஆவது ஓவரில் அணித் தலைவர் விராட் கோலி 24 ஓட்டத்துடன் ஆடடமிழக்க இந்திய அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தன.
அதன்படி ரிஷாத் பந்த் 3 ஓட்டத்தையும், ராகுல் 50 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் மற்றும் குருனல் பாண்டிய ஆகியோர் தலா ஒரு ஓட்டத்தையும் உமேஷ் யாதவ் 2 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் இந்திய அணி 16.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்றதுடன், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 126 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் தோனி 30 ஓட்டத்துடனும், சாஹல் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 127 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் நாதன் கவுல்டர்-நிலே 3 விக்கெட்டுக்களையும், ஜோசன் பெரேன்டோர்ப், சம்பா மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM