நுரைச்சோலையில்  கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது 

Published By: Digital Desk 4

23 Feb, 2019 | 09:05 PM
image

கற்பிட்டி, நுரைச்சோலைப் பகுதியில் 14 கிலோ கிராம் கேரளக் கஞ்சா பொதிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று சனிக்கிழமை (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி நுரைச்சோலை பகுதியிலிருந்து, பாலாவியை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை இன்று சனிக்கிழமை (23) காலை நுரைச்சோலை போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்தனர்.

இதன்போது, மேசை மின் விசிரி பெட்டி ஒன்றில் சூட்சகமான முறையில் 2 கிலோ கிராம் வீதம் 7 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 14 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவை போக்குவரத்து பொலிஸார் கைப்பற்றியதுடன், முச்சக்கர வண்டி சாரதியையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன், புத்தளம் போதை தடுப்பு பிரிவினரும் அழைக்கப்பட்டு, பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் நுரைச்சோலை பகுதியில் மேலதிக தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, நுரைச்சோலை குரவன்குடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 150 கிராம் கேரளக் கஞ்சா மற்றும் கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படகு ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் குறித்த வீட்டின் உரிமையாளரும் , இயந்திரப் படகின் உரிமையாளருமான நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இயந்திரப் படகு மூலம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள குறித்த கேரளக் கஞ்சா, விற்பனை செய்யும் நோக்கில் நுரைச்சோலையில் இருந்து பாலாவிப் பகுதியை நோக்கி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பொலிஸாரதல் கைப்பற்றப்பட்ட 14 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவை புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சந்திரசேன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க ஸ்ரீவர்தனவின் ஆலோசனையிலும், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சந்திரசேனவின் விஷேட உத்தரவிலும் நுரைச்சோலை பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54