ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் காமினிபுர பகுதியில் வீடு ஒன்றிலிருந்து புகையிலைத் தூள் அடைக்கப்பட்ட 750 குப்பிகளுடன் இன்று காலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் வலய பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த கைது சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த புகையிலைத் தூள் அடைக்கப்பட்ட குப்பிகள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த புகையிலைத் தூள் குப்பிகள் இலங்கையில் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மீட்கப்பட்ட பெட்டிகளில் ஒரு பெட்டியில் 25 குப்பிகள் வீதம் 30 பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று வெள்ளிக்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM