கஞ்சாவை டுபாய்க்கு கடத்த முற்பட்ட பெண் கைது!

Published By: Vishnu

22 Feb, 2019 | 10:27 AM
image

ஒருதொகை கஞ்சா போதைப்பொருளை பயண பொதியில் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் டுபாய்க்கு கடத்த முற்பட்ட பெண்ணொருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கண்டி அக்குரணை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். 

சுங்க அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே மேற்படி பெண் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ 94 கிராம் கஞ்சாவின் பெறுமதியானது 8,37,000 ரூபா எனத் தெரிவித்த சுங்கப் பிரிவு  அதிகாரிகள் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10