பெல்ஜிய பிரஸல்ஸ் நகரில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட உயிர் தப்பியுள்ள சந்தேகநபர் தோன்றும் புதிய காணொளிக் காட்சியொன்றை அந்நாட்டு விசாரணையாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட அந்த நபரைக் கண்டால் அவர் தொடர்பில் தகவல் தருமாறு விசாரணையாளர்கள் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
அந்த நபர் சி.சி.ரி.வி. காணொளிக் காட்சியில் மெல்லிய வர்ண மேலாடையும் தொப்பியும் அணிந்து வீதியொன்றில் செல்கிறார்.
கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி பிரஸல்ஸ் நகரிலுள்ள விமான நிலையம் மற்றும் புகையிரத நிலையம் என்பவற்றில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 32 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட 3 குண்டுதாரிகள் குண்டு வெடிப்பில் உயிரிழந்த அதேசமயம் பிறிதொருவர் புகையிரத நிலையத் தாக்குதலில் உயிரிழந்தார்.
பிரஸல்ஸ் நகரிலுள்ள விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரு தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு அருகில் தள்ளு வண்டியொன்றில் பயணப் பொதிகளை வைத்து தள்ளிச் சென்ற தொப்பியணிந்தவரே அந்த சந்தேகநபர் என பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிந்திய காணொளிக் காட்சி குறிப்பிட்ட சந்தேகநபர் விமான நிலையத் தாக்குதலையடுத்து தப்பிச்செல்வதை வெளிப்படுத்துகிறது.
அவர் இறுதியாக மேல்பீக் புகையிரத நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் அவதானிக்கப்பட்டுள்ளார்.
அவர் இந்த பிந்திய காணொளிக் காட்சியில் விமான நிலையத்தை விட்டு வெளியேறி வாடகைக் கார் தரிப்பிடமொன்றைக் கடந்து செல்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM