இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்டுவரும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி நடந்து வருகிறது.
இதுவரை 8 போட்டித் தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் (2010, 2011), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (2012, 2014), மும்பை இந்தியன்ஸ் (2013, 2015) ஆகிய அணிகள் தலா 2 முறையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), அணிகள் தலா 1 தடவையும் ஐ.பி.எல். கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.
9 ஆவது ஐ.பி.எல். போட்டி இன்று தொடங்குகிறது. எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி வரை 51 நாட்கள் இந்த ஐ.பி.எல். திருவிழா நடைபெறவுள்ளது.
ஆட்ட நிர்ணய சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த 2 அணிகளுக்கு பதிலாக ரைசிங் புனே சுப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் இந்தப் போட்டியில் விளையாடுகின்றன.
நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இ டெல்லி டேர்டெவில்ஸ்இ கிங்ஸ்லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவற்றோடு இந்த இரண்டு புதிய அணிகளையும் சேர்த்து மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்இ வெளியூர் என 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 14 போட்டிகள் இருக்கும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறும். மே 22 ஆம் திகதி வரை லீக் ஆட்டம் நடைபெறும்.
பிளே ஓப் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலி பையர் – 1 இல் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 3ஆவதுஇ 4ஆவது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் (வெளியேற்றுதல்) மோதும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணியும்இ குவாலி பையர் – 1 இல் தோற்கும் அணியும் குவாலிபையர் –2 இல் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு நுழையும் மற்றொரு அணியாக இருக்கும்.
கடந்த 8 ஆண்டுகளாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய டோனி தற்போது புதுமுக அணியான ரைசிங் புனே அணிக்கு தலைவராக செயற்படுகிறார். சென்னையை போலவே புனே அணியையும் முன்னேற்ற பாதைக்கு அவர் கொண்டு செல்வாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
டோனியை போலவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் 8 ஆண்டுகள் ஆடிய ரெய்னா குஜராத் லயன்ஸுக்கு தலைவராக உள்ளார். இந்த 2 புதிய அணிகளும் தங்களது முதல் ஐ.பி.எல். தொடரிலேயே அசத்துமா என்பது இந்த இருவரது கைகளில் இருக்கிறது.
இறுதிப் போட்டிக்கு 2 முறை தகுதி பெற்றும் ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்லாத பெங்களூர் அணி இந்த முறையாவது சம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. அந்த அணித் தலைவர் விராட் கோஹ்லி 20 ஓவர் போட்டிகளில் மிகவும் நல்லநிலையில் உள்ளார்.
கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் 3ஆவது முறையாக கிண்ணத்தை வெல் லும் ஆர்வத்தில் உள்ளன.
சாஹிர் கான் தலைமையிலான டெல்லி அணிஇ மில்லரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப்இ வோர்னரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவை முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளன.
மும்பை வான்கடே மைதானத் தில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் –- ரைசிங் புனே அணிகள் இரவு 8 மணிக்கு மோதுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM