(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதால் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.
.
பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பை விடுக்கும்போதே இதனைக்கூறிய சபாநாயகர் கரு ஜெயசூரிய மேலும் தெரிவிக்கையில்,
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கமைய மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதி தீவிர சோதனைக்குட்படுத்தப்படும்.இதன்போது அமைச்சர்கள் ,எம்.பி.க்களின் அறைகள், அலுமாரிகள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதால் இதற்குரிய ஒத்துழைப்புக்களை அவர்கள் வழங்க வேண்டும்.
அதேவேளை,வரவு,செலவுத்திடட்டும் சமர்ப்பிக்கப்படும் மார்ச் 5 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு பொதுமக்கள் வருகை தர அனுமதி வழங்கப்படாது.
பாராளுமன்ற பார்வையாளர் கலரி அன்றைய தினம் விசேட அழைப்பாளர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும். அத்துடன் அன்று எம்.பி.க்களுடன் வரும் விருந்தினர்கள் பாராளுமன்ற சுற்றுவட்டப்பகுதியான ஜெயந்திபுரவிலிருந்து தனி வாகனத்திலேயே அழைத்து வரப்படுவார்கள்.எம்.பிக்களின் வாகனங்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM