வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவர் மீதான நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர்பானணைக்காக வரும் மே 21ஆம் திகதிவரை மேன்முறையீட்டு நீதிமன்றம்.ஒத்திவைத்துள்ளது.
பா. டெனிஸ்வரனை மாகாண அமைச்சுப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை நடைமுறைப்படுத்தாது முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்கள் சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு அமைய, தம்மை மீண்டும் அமைச்சுப் பதவிக்கு நியமிக்காமல் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டுள்ளமையினால் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக பா. டெனிஸ்வரன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
டெனீஸ்வரனின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரால் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆட்சேபனை மனுவை கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரும் நீதிமன்றை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டு மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு மன்றால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும் மனு மீதான விசாரணையை எதிர்வரும் மே 21 மற்றும் மே 31ஆம் திகதிகளில் முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம். உத்தரவிட்டது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM