12 ஆவது ஐ.பி.எல்.கிண்ணத் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாகீர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
ஐ.பி.எல். 2019 தொடருக்கான முதல் 2 வாரத்திற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியான நிலையிலேயே அவர் இந்த பதிவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,
"என் இனிய தமிழ் மக்களே நலமா? மார்ச் 23 ஆம் திகதி நமது கோட்டையில் களம் இறங்குகிறோம். வந்தோம் வென்றோம் சென்றோம். வருவோம் வெல்வோம் செல்வோம். இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க. கொல காண்டுல வாரோம். செண்டிமெண்ட் இருக்குறவன் குறுக்க வராதீங்க. எடுடா வண்டிய போடுடா விசில" என பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்,
"நலம் நலம் அறிய ஆவல். ஆசையாய் வளர்க்கும் சிங்கக்குட்டி எப்படி இருக்கிறது. தெற்கு ஆப்பரிக்காவில் நல்ல மழை பெய்கிறதா? வீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும். தம்பி நிகிடி சவுக்கியமா? வரும் போது மறவாமல் சீமை ரொட்டியும் மிட்டாயும் வாங்கி வரவும்" என்று பதிவிட்டுள்ளனர்.
ஐ.பி.எல். தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு முதல் விளையாடி வருபவர் தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர். இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் போல் இவரும் அவ்வப்போது தமிழில் டுவிட் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM