(ஆர்.விதுஷா)
வெலிகடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறுபட்ட பகுதிகளில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்னும் போர்வையின் கீழ் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் , ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சுற்றிவளைப்புக்கள் வெலிகடை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புதுக்கடை இல 04 நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் நேற்று முன்தினம் இரவு 7.20 மணியளவில் கோட்டை வீதி , ராஜகிரிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது சிலர் தப்பி சென்றுள்ள நிலையில் அந்த ஆயுர்வேத மசாஜ் நிலைய முகாமையாளராக கருதப்படும் பெண்ணெருவரும் , விபச்சாரத்தில் ஈடுபட்தாக சந்தேகிக்கப்படும் 02 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் 27,25 மற்றும் 47 வயதுடைய வெல்லம்பிட்டிய , கரன்தெனிய மற்றும் காலி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை , வெலிகடை - குரே மாவத்தை , ராஜகிரிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.25 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நநிலையத்தின் முகாமையாளர் உட்பட பெண்ணெருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் .
இதன்போது 43 வயதுடைய அனூராதபுரம் பகுதியை சேர்ந்தவரும் 25 வயதுடைய தனமல்வில பகுதியை சேர்ந்த பெண்ணெருவருமெ இவ்வாறு கைது செய்யப்பட்டுளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபர்களை புதுக்கடை இல 04 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வெலிகடை பொலிசார் நேற்றைய தினம் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM