சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அருகில் இருந்த உணவகத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கு திட்டம் தீட்டிய பிரதான சூத்திரதாரியை நள்ளிரவு சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த கொள்ளையின் சூத்திரதாரி கொள்ளை இடம்பெற்ற உணவகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பணியாற்றியவர் என்பதோடு கொள்ளைச்சம்பவத்திற்கான நேரம் மற்றும் திட்டத்தினை தீட்டி தனது சகோதரர் மூலம் கொள்ளையினை மேற்கொண்டுள்ளார் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் குறித்த உணவக கூரையினை பிரித்து உள்நுழைந்த கொள்ளையர் சுமார் ஏழு லட்சம் ரூபா பணம் மூன்று லட்சம் பெறுமதியான தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பவற்றை கொள்ளையிட்டிருந்தனர்.
இக்கொள்ளை தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார் உணவக உரிமையாளரின் உதவியுடன் கிளிநொச்சி உடையார்கட்டு பகுதியில் மறைந்திருந்த ஒருவரை நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர்.
கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து மட்டுவில் பகுதியைச் சேர்ந்த கொள்ளையின் பிரதான சூத்திரதாரியும் கொள்ளையரின் சகோதரரான ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
மேற்படி கொள்ளை தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் அணியினரே தொடர்ச்சியான புலன் விசாரணைகளை மேற்கொண்டு கொள்ளையர்களை கைது சைய்துள்ளனர்.
மேலும் கொள்ளையர்கள் திருடிய பணத்தில் வாங்கிய பெறுமதியான பொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதோடு கைதானவர்களுக்கு வேறு கொள்ளைச் சம்பவங்களோடும் தொடர்பிருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM