நீர் வழங்கல் திட்டங்களை முடியுமானளவு இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் பல்வேறு நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைத்த பின்னர், பென் ஹெட் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அங்கு உரைநிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளி மக்கள் நீண்டகால போராட்டத்தின் மூலமே தங்களது உரிமைகளை படிப்படியாக வென்று வருகின்றனர். இந்திய அரசுடன் இணைந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளின் பின்னரே அடிப்படை உரிமையான வாக்குரிமை வழங்கப்பட்டது.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி,பதுளை மாவட்டத்தில் இருவர் உட்பட தற்போது 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த பிரதிநிதித்துவம் இன்னும் அதிகரிக்கப்படவேண்டும். உங்களுக்குப் பொறுத்தமானவர்களை தெரிவுசெய்தால்தான்,அவர்கள் அபிவிருத்திகளை மக்கள் காலடிக்கே கொண்டுவருவார்கள்.
விகிதாசார தேர்தல் முறையை கொண்டுவரும் முயற்சி இன்னும் கைவிடப்படவில்லை.
சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் இதன் பாரதூரங்களை அறிந்து எதிர்த்து வருகின்றன. பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே எமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றார்.
இந்நிகழ்வில் தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், வெலிமடை பிரதேச சபை பிரதி தவிசாளர் சீதா சமரவீர, பதுளை மாவட்ட கட்சி அமைப்பளாளர் தாஜுதீன், தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், சபையின் உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM