உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்கள் அழிக்கப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி இந்தியாவும், ஆர்ஜென்டினாவும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக போராட வேண்டுமென இருநாட்டு தலைவர்களளும் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் புலவாமா தாக்குதலுக்கு பின்னர் முதலாவது வெளிநாட்டு தலைவராக ஆர்ஜென்டினா ஜனாதிபதி மவுரிசியோ மாக்ரி இந்தியா வந்துள்ளார்.
டெல்லியில் அவரும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது காஷ்மீர் தாக்குதல் சம்பவம் பற்றியும் இருவரும் பேசினார்கள்.
பின்னர் இரு தலைவர்களும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள்’ என்ற சிறப்பு அறிவிப்புகளை கூட்டு அறிக்கையாக வெளியிட்டனர்.
குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
தீவிரவாதம் உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக எல்லைதாண்டிய தீவிரவாத நடவடிக்கையை எந்தவகையிலும், எந்த நாட்டின் மீது நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது.
அனைத்துவகையான தீவிரவாதத்தையும், அதன் வெளிப்பாடுகளையும் ஒடுக்க வேண்டும். தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகள், அவர்களது தொடர்பு மற்றும் செயல்பாடுகள், அவர்களை ஊக்கப்படுத்துபவர்கள், ஆதரிப்பவர்கள், நிதியுதவி மற்றும் புகலிடம் வழங்குபவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்கள் அழிக்கப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி இந்தியாவும், ஆர்ஜென்டினாவும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக போராடவும், இச் சவாலை சந்திக்கவும் தங்களது நல்லுறவை பலப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM