சவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை இராணுவ வீரர்களின் உயிரிழப்பால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பிரச்சினை நிலவி வருகிறது.
காஷ்மீரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஆதரவு இருக்கும் என உலக நாடுகள் குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல் இந்தியா தாக்குதல் நடத்தினால் ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் இந்த விஜயத்தின்போது சவுதி இளவரசர் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தவிர்க்க அந் நாட்டுடன் 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி என இந்தியா அறிவித்த காரணத்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சவுதி அரேபியாவின் இந்த ஒப்பந்தங்கள் பெருமளவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின்போது பாகிஸ்தான் அதிபர் மாளிகைக்கு சென்ற முஹம்மது பின் சல்மான், அல் சவுத் அதிபர் ஆரிப் ஆல்வி-யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிபர் ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய ‘நிஷான் இ பாகிஸ்தான்’ விருதினை சவுதி இளவரசருக்கு வழங்கி கெளரவித்தார்.
இதன்போது சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் நெருக்கமான நாடு என்றும், பாகிஸ்தானுடன் உறவு தொடரும் என்றும் சவுதி இளவரசர் அறிவித்தார்.
இந் நிகழ்வின்போது பாகிஸ்தான் இம்ரான் கான் உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM