அனுமதிப் பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை சிப்பி மூடைகளை பழுதடைந்த லொறி ஒன்றில் ஏற்றி சென்றமை தொடர்பாக கல்குடா பொலிஸார் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன் லொரியினையும் கைப்பற்றியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக் கிழமையன்று கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கருங்காலிச் சோலை பேத்தாழையில் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் மூடைகள் சிலவற்றினை ஏற்றிக் கொண்டு கல்குடா வீதியில் வந்த லொறியினை கல்குடா வீதி போக்குவரத்து பொலிசார் சோதனை செய்த போது அவை ஆற்றில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிப்பிகள் என அடையாளம் கண்டனர்.
இவற்றினை வேறு இடத்தி;ற்கு கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் அவை பொலிசாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.லொறி மற்றும் சாரதியினை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM