அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஷ்ரஃப் நகர் குடியிருப்புப் பிரதேசத்தில் காட்டு யானைகள் சில இன்று(17) அதிகாலை கிராமத்திற்குள் புகுந்து பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் உட்புகுந்த குறித்த காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசித்து பல சேதங்களை உண்டுபண்ணியுள்ளன.
குடியிருப்புக்களின் சுற்றுமதில்கள், கால்நடைகளின் குடிசைகள் போன்றவற்றை உடைத்து நாசம் செய்துள்ளன.
இது தவிர, பயன்தரும் தென்னை மரங்கள் உள்ளிட்ட மேட்டு நிலப் பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் பலவற்றையும் குறித்த யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
இச்சேதங்களை உண்டாக்கிய காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கைகளை பிரதேச மக்கள் மேற்கொண்டபோது அக்காட்டு யானைகள் மக்களை தாக்க முற்பட்டதாகவும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அஷ்ரஃப் நகர் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையினையும் நாளாந்தக் கூலி வேலையினையும் நம்பியே வாழ்வாதாரத்தினை நகர்த்திச் செல்கின்றனர்.
இப்பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் தினமும் பல்வேறான பிரதேசங்களிலிருந்து கொண்டு வரப்படும் திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இக்குப்பை மேட்டில் கழிவுணவுகளை உட்கொள்ளும் காட்டு யானைகள் இரவுப் பொழுதுகளில் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உட்புகுந்து உப உணவுப் பயிரச் செய்கைகள், விவசாயச் செய்கைகள், மரம் செடி கொடிகள் போன்றவற்றை நாசம் செய்து வருவதுடன், தமது குடியிருப்புக்களையும் சேதமாக்கி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM