வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு பகுதியில் இன்று (16) அதிகாலை 4.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த முதியவர் வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் வீட்டின் மேல் மாடியில் ஏறி கயிற்றினை போட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
முதியவரை காணவில்லை என உறவினர்கள் தேடிய சமயத்தில் வீட்டின் மேலே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த குற்ற தடவியல் பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்களுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் 68 வயதுடைய கிருபாகரன் கோபால கிருஸ்னன் என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM