(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் தலைவராக இருப்பதோடு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினையும் தன்வசம் வைத்துள்ளார். இதனடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அரசாங்கத்துடன் தொடர்புபட்டுள்ளது. எனவே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்துள்ள இந்த அரசாங்கத்தில் பிரிதொரு கட்சியையும் இணைத்துக் கொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருந்தால் அவரிடம் காணப்படும் அமைச்சுக்களை அவர் துறக்க வேண்டும். இல்லையெனில் அமைச்சுக்களை பெற்று மக்களுக்கு சேவை செய்ய விரும்புவபர்களுக்கு அதனைச் செய்வதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை அமைக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM