(ப. அகிந்தன்)
வடபகுதிக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரின் கைத்தொலைபேசி திருடப்பட்டுள்டளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவதுவதாவது,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சத்திர சிகிச்சை பிரிவு நேற்று (14.02.2019) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விலேயே பிரதமரின் செயலாளரின் 55,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி திருடப்பட்டுள்ளது.
இச் திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் செய்துகொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் இன்றைய தினம் (15.02.2019) யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததுடன் திருடப்பட்ட கைத்தொலைபேசியிலிருந்த சிம்மின் மூலம் கைத்தொலைபேசி இருக்குமிடத்தினை அறிந்துகௌ்ள முடியும் என்பதால், அது தொடர்பான தகவல்களை வலையமைப்பு நிறுவனத்தை வழங்கும்படி உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிவானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இதனையடுத்து நீதிமன்றம் அதற்கான கட்டளை வழங்கியது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM