(இராஜதுரை ஹஷான்)
அரசியல் தீர்வு தொடர்பில்பொய்யான வாக்குறுதிகளை குறிப்பிட்டு தமிழ் மக்களையும் ,சர்வதேசத்தையும் ஏமாற்றுவதை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தவிர்த்துக் கொள்ள வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
தமது தலைமைத்துவத்தின் கீழ் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதனூடாக அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் என்று குறிப்பிட்டுள்ளமையானது அரசியல் பிரச்சாரமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தவரையில் ஒரு அரசியல் பிரச்சாரமே. இவர்கள் ஒருபோதும் சமவுடையமையான அரசியல் கொள்கைகளை பின்பற்றமாட்டார்கள். ஆகவே பொய்யான வாக்குறுதிகளை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் நாடு பிளவுப்படும் வகையில் எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அரசியல் ரீதியில் தமிழ் மக்கள் காலம் காலமாக பிரித்தாளப்பட்டுள்ளனர் என்ற விடயத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM