(இராஜதுரை ஹஷான்)
தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளமையானது எதிர்கட்சியினரது எதிர்ப்புக்களுக்கு மிகவும் பலமாக காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் டி. பி. சானக தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுமக்களின் நன்மைக்காக ஒன்றும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்படவில்லை.
கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளவே இந்த அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது .
இம்மாதம் 20 ஆம் திகதி தேசிய அரசாங்கம் நிச்சயம் உருவாக்கம் பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் குறிப்பிடுவது பொய்யான வாதமாகும்.
இந்த பாராளுமன்றத்தில் ஒருபோதும் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாகுவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்கமாட்டோம். இதற்காக எந்நிலைக்கும் செல்லத் தயார்
எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை இளைஞர்களுக்கு வழங்க ஆரம்பித்துவிட்டார்.
இளைஞர்களை மையப்படுத்தியே தேசிய பொருளாதார கொள்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடுவர் ஆனால் வேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வை காண நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM