பொலிஸாரை தாக்க முற்பட்ட 3 பேர் பிணையில் விடுதலை

Published By: R. Kalaichelvan

15 Feb, 2019 | 01:10 PM
image

யாழ்ப்பாணம்- கொடிகாமம் கெற்பேலி பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் மீது உழவு இயந்திரத்தால் மோதி தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்ட 3 போ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளா்கள்.

கொடி­கா­மம் கெற்­பே­லி­யில் ஜன­வரி 14 ஆம் திகதி இரவு சட்விரோத­மாக மணல் ஏற்­றப்­ப­டு­வ­தா­கக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய உப பரி­சோ­த­க­ரும் 3 பொலிஸ் அலு­வ­லர்­க­ ளும் உந்­து­ரு­ளி­யில் சம்­பவ இடத்தை நோக்­கிச் சென்றுள்­ள­னர். 

வழி­யில் மணல் ஏற்­றி­ய­படி வாக­னம் வந்­து­கொண்­டி­ருந்­தது. நிறுத்து­மாறு பொலி­ஸார் கூறி­ய­ போது அவர்­களை வாக­னத்­தால் மோதி­விட்டு வாக­னச் சாரதி வாக­னத்­தைக் கைவிட்­டுத் தப்­பி­யோடி­யுள்­ளார்.

அங்கு நின்ற ஏனைய பொலிஸ் அலு­வ­லர்­கள் பொலிஸ் நிலை­யத்­துக்­குத் தக­வல் அனுப்­பி­விட்டு காய­ம­டைந்த உப பரி­சோ­த­கரை உழவு இயந்­தி­ரத்­தில் ஏற்­றிக் கொண்டு வரும்­வ­ழி­யில் வாகனங்களில் துரத்தி வந்­த­வர்­கள் பொலிஸ் அலு­வ­லர்­க­ளைத் தாக்­கி­விட்டு உழவு இயந்­தி­ரப் பெட்­டிக்­குள் காய­ம­டைந்த நிலையில் காணப்­பட்ட உப பரி­சோ­த­கரை தரை­யில் இறக்கி வைத்து­விட்டு வாக­னத்­தைக் கொண்டு தப்­பி­யோ­டி­யுள்­ள­னர். 

இச் சம்­ப­வம் தொடர்­பாக முத­லில் இரு­வ­ரும் பின்­னர் ஒரு­வ­ரும் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு கடந்த 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்கப்பட்டிருந்தனர். அன்று அடை­யாள அணி­வ­குப்பு பலத்த பாது­காப்­பு­டன் நடத்­தப்­பட்­டது. நான்கு பொலி­ஸா­ரில் இரு­வர் சாட்­சி­க­ளாக வருகை தந்து இரு­வரை அடை­யா­ளம் காட்­டி­னர். 

ஏனைய இரு­வரையும் அடை­யா­ளம் காண்­பிப்­ப­தற்­காக நேற்றுவரை வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­ டது. 

நேற்று இரு பொலிஸ் அலு­வ­லர்­க­ளும் சாட்­சி­க­ளாக வருகை தந்து பதில் நீதி­வான் ப.குக­னேஸ்­வ­ரன் முன்­னி­லை­ யில் நடை­பெற்ற அடை­யாள அணி­வ­குப்­பில் இரு­வ­ரை­யும் அடை­யா­ளம் காட்­டி­னர். 

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நீதி­மன்­றில் விசாரணைக்கு எடுக்­கப்­பட்­ட­போது மூன்று சந்­தேக நபர்­க­ளும் தலா 5 லட்­சம் ரூபா ஆள்­பி­ணை­யில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59