(ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம்)
பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவுக்கு (கோப்) அரச கணக்கு குழுவுக்கும் இணைந்த பொது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்பிக்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இந்த நியமனங்கள் தொடர்பாக இன்று வியாழக்கிழமை பாராளுமற்றத்துக்கு அறிவித்தார்.
ஏற்கனவே சபாநாயகரால் அறிவிக்கப்பட்ட கோப் குழு மற்றும் அரச கணக்கு குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர் நியமனங்களுக்கு மேலதிகமாக அவ்விரு குழுக்களும் தலா இரு உறுப்பினர்கள் மேலும் நியமிக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் இதன் போது அறிவித்தார்.
அந்த வகையில் கோப் குழுவுக்கு ஐ.தே.கட்சி எம்.பி அப்துல்லாஹ் மஹரூப் மற்றும் இணைந்த பொது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐ.ம.சு.மு. எம்.பி. பிரசன்ன ரணதுங்க ஆகிய இருவரும் மேலதிகமாக நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
அதே போன்று ஐ.தே.கட்சி எம்.பி. சந்திம கமகே மற்றும் இணைந்த பொது எதிர்க்கட்சியின் ஐ.ம.சு.மு. எம்.பி. மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவரும் அரச கணக்குக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி சபாநாயகர் இதன் போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM