கல்வியியல் கல்லூரிகளுக்கு தபால் மூலமும் விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம்

Published By: Vishnu

13 Feb, 2019 | 03:37 PM
image

கல்வியியல் கல்லூரிகளுக்குப் பதிவு செய்வதற்காக,  தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களைக்  கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு மாத்திரமே இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர், குறித்த  விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள  கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம், 27 கற்கை நெறிகளுக்காக சுமார் எட்டாயிரம்  மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு கிடைக்கும் விண்ணப்பங்களில் தெரிவு செய்யும் மாணவர்களுக்கான கற்கைநெறிகள், எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம்  இதன்போது மேலும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50