யாழ்ப்பாணம் தென்மராட்சி தெற்கு தனன்களப்புப் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.
கடந்த வருடம் நவம்பர் 12 ஆம் திகதி இரவு தனன்களப்புப் பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார் அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
பொலிசார் வாகனத்தை துரத்திச் சென்றபோது சந்திக நபர் வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார். மணல் ஏற்றிய நிலையில் கைவிடப்பட்ட அந்த வாகனத்தைப் பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
தலைமறைவாக இருந்த சாரதியை பொலிஸார் கடந்த நான்காம் திகதி கைது செய்து மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தினர். இந்நிலையில் குறித்த சாரதியை இன்று வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இந் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டமையால் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த நீதிவான். தண்டப் பணம் செலுத்தாவிடின் ஒரு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறும், மணலைப் பறிமுதல் செய்யமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM