கஞ்சா செடியினை பூஞ்செடி என நினைத்தே அதனை அழிக்காது விட்டேன் என , கஞ்சா வளர்த்தார் என கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக அமைப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற பொலிஸார் அங்கு வளர்ந்த கஞ்சா செடியினை மீட்டதுடன் அங்கிருந்த தென்னிலங்கை தெல்தெனியை சேர்ந்த கட்டட தொழிலாளியையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டார்.
அங்கு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , கட்டடத்தில் அந்த செடி தானாகவே வளர்ந்தது.அதனை பூஞ்செடி என நினைத்தே அகற்றாது விட்டேன். என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த நபரை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான காசு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM