3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் மனித ரோபோ

Published By: Daya

12 Feb, 2019 | 09:36 AM
image

பிரிட்டனில் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் ரோபோ கலைஞர் ஒருவர், மனித அமைப்பை கொண்ட ரோபோவை உருவாக்குகின்றார்.

உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. இந்நிலையில், மனித வடிவமைப்பில் இருந்து சற்றும் மாறாத வகையில் பெண் ரோபோட் ஒன்று உருவாக்கப்படுகிறது.

குறித்த ரோபோவை பிரிட்டனைச் சேர்ந்த ஐடென் மெல்லர்  என்பர்வ உருவாக்கி வருகின்றார். இதன் நுணுக்கமான முக பாகங்கள், புருவங்களின் முடி போன்றவற்றை தன் கைகளால் கலைநயத்துடன் செய்து வருகிறார்.  

குறித்த பெண் ரோபோவுக்கு ஐடா என பெயரிடப்பட்டுள்ளது. 

குறித்த ரோபோட், அல்ட்ரா ரியலிஸ்டிக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது. பெண்களைப் போன்று இயற்கையான முடிகள், புருவங்கள் போன்றவற்றை பொருத்தும் பணியில் சிறப்பு கலை நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதுதொடர்பாக ஐடென் மெல்லர் தெரிவித்ததாவது,

‘ஐடா ரோபோட்டினால் மக்களிடையே உரையாட முடியும். இன்றைய தொழில்நுட்பத்தினைப் பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கும். ஐடாவின் அசைவுகள், நகர்வுகள் யாவும் மனிதர்களை போல இயல்பாக இருக்கும். கண் விழிகள் பொருத்தப்பட்டு,  ஐடா இருக்கும் அறை முழுதும் பார்க்கும் அளவிலும், மனிதர்களுடன் கண் அசைவின் மூலம் தகவல்களை பரிமாற முடியும். 

மேலும் கணனியில் செயற்கை நுண்ணறிவு கொண்டு ஐடா இயக்கப்படுவதன் மூலம், மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்ளவும், மனிதர்களை போல் மிமிக்கிரி செய்யவும் முடியும். இந்த ரோபோக்களை மனிதர்களுக்கு இணையான வகையில் உருவாக்குவதே எங்கள் நோக்கம்’ என்றார்.

மெஸ்மர் எனும் ரோபோட் தொழில்நுட்பத்தினை கொண்டு ஐடாவின் தலைப்பகுதி, சிலிகான் தோல் மற்றும் 3டி பிரிண்டிங் செய்யப்பட்ட பற்கள் போன்றவற்றை உருவாக்குகின்றனர்.

கார்ன்வாலின் பால்மவுத் நகரில் உள்ள பொறியியல் கலை நிறுவனத்தின் மூலம் பல பொறியாளர்களின் தொடர் முயற்சியினால், இந்த ரோபோ தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 

இந்த ஆண்டு மே மாதம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதன் புகைப்படங்கள் நவம்பர் மாதம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right