(நா.தினுஷா)
ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களுடன் ஒன்றிணைந்த வகையில் புதிய ஜனநாயக தேசிய முன்னணி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதனூடாக ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீன தன்மையினை பாதுகாத்து சுதந்திரமான சமூகமொன்றை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கான புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆறு தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் ஏனைய அனைத்து அமைப்பாளர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முறையாக நடைமுறைப்படுத்துவதில் தவறு இழைப்பார்களானால் அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM