முன்னாள் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த கூட்டம் : சபையில் வாக்குவாதம்

Published By: R. Kalaichelvan

08 Feb, 2019 | 07:24 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறிலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் முன்னாள் சபாநாயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும் இடம்பெற்றுள்ளது.

அதனால் அந்த நிறுவனத்தில் எவ்வாறான மோசடிகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள் என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். 

இதன்போது சபைக்கு வந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஒழுங்கு பிரச்சினையை முன்வத்து, அவ்வாறு கூட்டம் நடத்தி தீர்மானங்கள் எடுத்திருப்பதை நிருபித்தால் எனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதாக குறிப்பிட்டார். 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்னெத்தி சமல் ராஜபக்ஷ் மற்றும் ரன்ஜன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

பாராளுமன்றத்தில்  இன்று கோப் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்க, ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஷ்வின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளதாக போப்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கூட்டம் சபாநாயகரின் வாசஸ்தலத்தில் நடத்த எந்த தேவையும் இல்லை. அப்படியாயின் யாருடைய தேவைக்கு இது நடத்தப்படுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38