வெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சி

Published By: Daya

08 Feb, 2019 | 04:34 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சிக்கின்றனர். அதனால் தான் நஷ்டஈடு வழங்குவதில் சில வேளைகளில் காலதாமதம் ஏற்படுகின்றது.

என்றாலும் வடக்கில் வெள்ளத்தில்  நெற் செய்கை அழிவடைந்த விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். அத்துடன் நட்டஈடு கிடைகாதவர்கள் 14நாட்களுக்குள் முறைப்பாடு செய்யலாம் விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அத்துடன் வடக்கு வெள்ளத்தினால் 1600 மாடுகள்,700 ஆடுகள்,5000 கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும் இவற்றின் பெறுமதி 55 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கான நஷ்ட ஈட்டை நாம் வழங்குவோம். என்றாலும் சிலர் வெள்ளத்தை காரணம் காட்டி  போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சிக்கின்றனர். அதனால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்யிருப்பதால்தான் நஷ்டஈடு வழங்குவதில் சில வேளைகளில் காலதாமதம் ஏற்படுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21