கிராமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே நாட்டின்  எதிர்காலம் தங்கியுள்ளது - அமைச்சர் சாகல

Published By: Daya

08 Feb, 2019 | 03:02 PM
image

(செய்திப் பிரிவு)

கிரமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளமையால் அந்தப் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென  துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்  சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 

பிரதம அமைச்சர் அலுவலக பிரதானி , துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்,  மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்னாயக்க  பல்லேகம  பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக  இன்று வெள்ளிக்கிழமை  கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, 

கிராமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே எம் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. அப்பாடசாலைகளை அபிவிருத்திசெய்ய வேண்டும். இப்பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும். கல்வியுடன் விளையாட்டிலும் ஈடுபட்டு இப்பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு எம்மாலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

இவ்வாறானதோர் நிகழ்வினை ஏற்பாடுசெய்த அனைவருக்கும்  மனமார்ந்த நன்றிகள்.

பல்லேகம பாடசாலை நீண்ட காலமாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்கின்ற பாடசாலையாகும். இப்பாடசாலை ஒரு சிறு நிலப்பரப்பில் அமைந்துள்ளமையால் அங்கு கல்வி பயில்கின்ற மாணவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வது கடினமாக உள்ளது. 

இப்பாடசாலையை “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கி பாடசாலைக்கு தேவையான புதிய கட்டடங்களை நிர்மாணித்து, பிள்ளைகளின் தேவைகளை பூர்த்திச் செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08