(செய்திப் பிரிவு)
கிரமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளமையால் அந்தப் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
பிரதம அமைச்சர் அலுவலக பிரதானி , துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர், மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்னாயக்க பல்லேகம பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக இன்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,
கிராமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே எம் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. அப்பாடசாலைகளை அபிவிருத்திசெய்ய வேண்டும். இப்பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும். கல்வியுடன் விளையாட்டிலும் ஈடுபட்டு இப்பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு எம்மாலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறானதோர் நிகழ்வினை ஏற்பாடுசெய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பல்லேகம பாடசாலை நீண்ட காலமாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்கின்ற பாடசாலையாகும். இப்பாடசாலை ஒரு சிறு நிலப்பரப்பில் அமைந்துள்ளமையால் அங்கு கல்வி பயில்கின்ற மாணவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வது கடினமாக உள்ளது.
இப்பாடசாலையை “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கி பாடசாலைக்கு தேவையான புதிய கட்டடங்களை நிர்மாணித்து, பிள்ளைகளின் தேவைகளை பூர்த்திச் செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM