(ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம்)
வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களை அடையாளப்படுத்துவதற்கான காலத்தை இரண்டு வருடங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் இன்று சபையில் தனது இணக்கத்தை தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவினால் முன்வைக்கப்பட்ட ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தின் இரண்டாம், மதிப்பீடு மீதான விவாதத்தின் போது ஜே.வி.பி.எம்.பி விஜித ஹேரத் உரையாற்றினார்.
இதன்போது இச் சட்ட மூலத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளை அடையாளப்படுத்துவதற்காக ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அக்கால அவகாசம் போதுமானதல்ல. எனவே அதனை இரண்டு வருடங்களாக அதிகரிக்க வேண்டும். அதற்கான திருத்தத்தை உள்ளீர்க்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
இதற்கு சபையில் பதிலளித்த போதே அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தமது சொந்தக் காணிகளை அடையாளப்படுத்துவதற்கான காலத்தை இரண்டு வருடமாக அதிகரிக்கும் திருத்தத்தை அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM