சரக்கு சேவை வரி மூலம் கடந்த 9 மாதங்களில் மட்டும் தமிழக அரசுக்கு வருவாயாக 31 ஆயிரத்து 350.63 கோடி ரூபா கிடைத்துள்ளது.
குறித்த வரி விதிப்பினால் மத்திய மற்றும் மாநில அரசுகள் வருவாயை ஈட்டி வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை, மத்திய அரசு அவ்வப்போது ஈடுகட்டி வருகிறது.
இந்த நிதி ஆண்டின் தொடக்கமான கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதிவரை 9 மாதங்களில் தமிழக அரசுக்கு எவ்வளவு வருவாய் மற்றும் இழப்பீடு கிடைத்துள்ளது என்ற தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:-
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் தமிழக அரசுக்கு ரூ.3,161.57 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் 2,864.29 கோடி ரூபா , ஜூனில் 4,718.51 கோடி ரூபா, ஜூலையில் 3,072 கோடி ரூபா, ஆகஸ்டில் 3,593.15 ரூபா, செப்டெம்பரில் 3,014.26 ரூபா, அக்டோபரில் 4,159.91ரூபா, நவம்பரில் 3,116.53 ரூபா, டிசம்பரில் 3,650.42ரூபா என 9 மாதங்களில் தமிழகத்துக்கு மொத்தம் 31 ஆயிரத்து350.63 கோடி ரூபா வருவாய் கிடைத்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு இழப்பீட்டை வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும், ஒக்டோபரிலும் இழப்பீடாக ஒரு ரூபாவைக்கூட மத்திய அரசு வழங்கவில்லை. செப்டெம்பரில் 308 கோடி ரூபா, நவம்பரில் 77 கோடி ரூபா, டிசம்பரில் 1,470 கோடி ரூபா என மொத்தம் 1,855 கோடி ரூபாவை தமிழக அரசுக்கு இழப்பீடாக மத்திய அரசு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM