(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து அமைக்கும் தேசிய அரசாங்க யோசனையை இன்றைய தினம் சபையில் சமர்ப்பிக்க கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் இறுதி நேரத்தில் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சி அதனை ஒத்திவைத்துள்ளது. அதற்கமைய அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் உத்தேச தேசிய அரசாங்க யோசனையை எடுத்துகொள்ளப்படவுள்ளது.
அமைச்சரவையையும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களை அதிகரித்துக்கொள்ள தேசிய அரசாங்கம் அமைப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம் எடுத்ததுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க நேற்றைய தினம் சபையில் உத்தேச அரசியல் அமைப்பு யோசனை ஒன்றினை முன்வைப்பதாக கூறியிருந்தனர்.
நேற்று கூடிய கட்சி தலைவர் கூட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சி இந்த யோசனையை கூறியதை அடுத்து பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட சகல எதிர்க்கட்சிகளும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
எனினும் எந்த எதிர்ப்பு வந்தாலும் ஐக்கிய தேசிய கட்சி உத்தேச தேசிய அரசாங்க யோசனையை முன்வைக்கும் என கூறிய நிலையில் நேற்று இரவு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடிய வேளையில் அதில் இந்த காரணிகள் ஆராயப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM