சாரதிகளின் அனுமதிபத்திங்களை பெற்றுக்கொள்வதற்காக வைத்திய பரிசோதனை செய்யும் இடத்தில் நீண்ட நேரமாக காத்திருப்பதால் பொதுமக்கள் அசௌகரித்திற்குள்ளானதாக தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுவதற்காக 4000 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வைத்திய சிகிச்சையால் பொது மக்கள் வசதியின்றி பெரும் சிரமத்துக்குட்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, போதுமான கழிப்பறை வசதிகள் இன்மை போன்றவற்றையும் அவர் அவதானித்துள்ளார்.
போக்குவரத்து சேவைக்கான வைத்திய பரிசோதனை காரியாளயலத்தில் வைத்திய பரிசோதனை செய்வதற்கான 100 நாட்களை ஒதுக்கப்பட்ட நிலையில் வருகை தந்த பெருந்திரளான பொதுமக்களை திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடைபெறுகின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வரைக்கும், தற்காலிக தீர்வாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் கொழும்பு பிரதான காரியாலயம் மற்றும் காலி உபகாரியாலயத்துடன் ஒன்றாக இணைந்து இம்மாதம் 9,10, மற்றும் 16,17 ஆகிய திகதிகளில் காலை 9 மணி முதல் வைத்திய பத்திரம் வழங்க தீர்மானித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM