(எம்.எப்.எம்.பஸீர்)
மாகந்துரே மதூஷை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற பல பாதாள உலக கொலைகள், போதைப் பொருள் கடத்தல்களின் பின்னணியில் இருக்கும் மிக முக்கிய புள்ளியான பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிலாகே மதூஷ் லக்ஷித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலை நகரான அபுதாபியில் 6 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்பில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1963 ஆம் ஆண்டின் தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கையில் உள்ள விதி விதாங்களின் பிரகாரம், மாகந்துரே மதூஷயும் அவருடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய பாதாள உலகத்தவர்கள் உட்பட இலங்கையர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்து இங்கு வைத்து விசாரிக்க இராஜதந்திர ரீதியிலான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்காக பாதுகாப்பு அமைச்சினதும், வெளிவிவகார அமைச்சினதும் சட்ட வல்லுநர்களுடன் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் இணைந்து செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM