(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வஸீம்)
சுங்க திணைக்களத்தின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அவர்களின் போராட்டம் தொடர்ந்தால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு இடம்பெறுவதுடன் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நிலையியற்கட்டளை 27/2இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சுங்க திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்கியமைக்கு எதிராக சுங்க தொழிற்சங்கங்கள் கடந்த 7 நாட்களாக போராட்டம் செய்கின்றன. ஆனால் அரசாங்கம் அவர்களின் போரிக்கைகள் தொடர்பில் எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை. இவர்களின் போராட்டத்தால் முழு நாடும் செயலிழந்துள்ளதுடன் திறைசேரிக்கு நாளாந்தம் நேரடியாக 3 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM