உயிரிழந்த இராணுவ வீரர்களின் இறுதிக்கிரியைகள் அவர்களின் சொந்த ஊரில் நடத்த ஏற்பாடு

Published By: Vishnu

05 Feb, 2019 | 01:25 PM
image

ஐ. நா. அமைதி காப்பு பணிகளின்போது உயிரிழந்த இலங்கை வீரர்களின் இறுதிக்கிரிகைகள் அவர்களின் சொந்த ஊர்களான பொலன்னறுவை மற்றும் பொல்பிதிகம ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளன.

உடல்கள் நேற்றையதினம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. 

ஐ. நா. அமைதி காப்பு பணிகளின்போது உயிரிழந்த இலங்கை வீரர்களின் உடல்கள் நேற்றையதினம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. 

குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த மேஜர் எச்.டபிள்யூ.டீ.ஜெயவிக்கிரம மற்றும் சார்ஜன் எஸ்.எஸ். விஜேகுமார ஆகிய வீரர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் இலங்கை நேற்றைய தினம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு  இராணுவத்தினரால் கையேற்கப்பட்டன. 

அதன்படி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அடங்கிய பேழைகளை கையேற்கும் நிகழ்வின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவும் கலந்து கொண்டிருந்தார். 

உயிரிழந்த இலங்கை வீரர்களின் பேழைகளை மூடிய ஐக்கிய நாடுகள் சபைக் கொடியானது மாலி பிராந்தியத்தில் ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும் படைகளின் கட்டளைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் டென்னிஸ் ஜில்லிஸ்போரே மற்றும் ஏனைய ஐ.நா. பிரதிநிதிகள் ஆகியோரினால் இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. 

அதனைத்தொடர்ந்து பேழைகளில் தேசிய கொடி போர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபைக் கொடி மாலி பிராந்தியத்தில் ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும் படைகளின் கட்டளைத் தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும் உயிரிழந்த இலங்கை வீரர்களின் உடல்களை கையேற்கும் நிகழ்வில் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஹனா சிங்கர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் அவர்களின் இறுதிக்கிரிகைகள் அவர்களின் சொந்த ஊர்களான பொலன்னறுவை மற்றும் பொல்பிதிகம ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளன.

மாலி நாட்டில் கீறன பிராந்தியத்தில் அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும்போது இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கெப்டன் எச்.டபிள்யூ.டீ. ஜயவிக்ரம மற்றும் கோப்ரல் எஸ்.எஸ். விஜயகுமார ஆகிய இரு வீரர்கள் உயிரிழந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50