(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்து சமர்பிக்கப்பட்ட பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரேனும் ஆதராவாக வாக்களித்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
19 ஆம் அரசியலமைப்பு சீர்திருதத்தின் படி அமைச்சரவையின் எண்ணிக்கை 30 எனவும், தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு தேவையேற்படின் அதன் எண்ணிக்கையை 45 வரை அதிகரிக்க முடியும். இதனை கொண்டே அவர்கள் தேசிய அரசமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் காங்ரஸ்சுடன் தேசிய அரசமைக்கும் முயற்சியை கைவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இவர்கள் அரசமைக்கலாம். எனினும் அதற்கு பெரும்பாண்மை மக்களின் ஆதரவு அவர்களுக்கு கிடைக்காது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM