வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

05 Feb, 2019 | 10:40 AM
image

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் 40 வயதுடைய களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இன்று அதிகாலை 5.00 மணியளவில் துபாயிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் விமானத்திலேயே இவர் வருகை தந்துள்ளார்.  

இந் நிலையில் விமான நிலையத்தில் வைத்து இவரை சோதனையிட்டபோது அவரது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 142 சிகரெட் பெட்டிகள் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட் பெட்டிகளிலிருந்து 28,400 வெளிநாட்டு சிகரெட்டுக்களை மீட்டதாகவும், அவற்றின் பெறுமதி 15,62,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து சிகரெட்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அவருக்கு 10,000 ரூபாவை செலுத்துமாறும் அபராதம் விதித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55