சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் 40 வயதுடைய களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இன்று அதிகாலை 5.00 மணியளவில் துபாயிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் விமானத்திலேயே இவர் வருகை தந்துள்ளார்.
இந் நிலையில் விமான நிலையத்தில் வைத்து இவரை சோதனையிட்டபோது அவரது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 142 சிகரெட் பெட்டிகள் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட் பெட்டிகளிலிருந்து 28,400 வெளிநாட்டு சிகரெட்டுக்களை மீட்டதாகவும், அவற்றின் பெறுமதி 15,62,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து சிகரெட்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அவருக்கு 10,000 ரூபாவை செலுத்துமாறும் அபராதம் விதித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM