வடமாகாணத்தில் கடந்த 10 நாட்களில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவத்த பொலிஸார் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் 90 சதவீதமானவை யாழ்ப்பாணத்திலேயே மீட்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷாந்த் பெர்னாண்டோ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“வடக்கு மாகாணத்தில் கடந்த 10 நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெருந்தொகையான கஞ்சா கைப்பற்றப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் குறைந்தளவு கஞ்சா மீட்கப்பட்டது.
வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என யாழ்ப்பாணத்தில் 29 பேரும், வவுனியாவில் 4 பேரும், மன்னாரில் 4 பேரும், கிளிநொச்சியில் 3 பேருமாக 40 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM