கஞ்சாவில் 90 சத­வீ­த­மானவை யாழ்ப்பா­ணத்­தி­லேயே மீட்­கப்­பட்டுள்ளது:­ரொஷாந்த் பெர்னாண்டோ 

Published By: R. Kalaichelvan

02 Feb, 2019 | 01:06 PM
image

வடமாகா­ணத்­தில் கடந்த 10 நாட்க­ளில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவத்த பொலிஸார் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்­ள­னர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் 90 சத­வீ­த­மானவை யாழ்ப்பா­ணத்­தி­லேயே மீட்­கப்­பட்­டுள்­ள­தா­க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷாந்த் பெர்னாண்டோ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“வடக்கு மாகா­ணத்­தில் கடந்த 10 நாட்க­ளில் யாழ்ப்­பா­ணத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும், மன்­னார் மற்­றும் கிளி­நொச்சி மாவட்டங்க­ளி­லும் பெருந்­தொ­கை­யான கஞ்சா கைப்பற்றப்பட்டது. 

வவு­னியா மாவட்­டத்­தில் குறைந்­த­ளவு கஞ்சா மீட்­கப்­பட்­டது.

வல்­வெட்­டித்­துறை மற்­றும் பருத்­தித்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் மாத்­தி­ரம் 200 கிலோ­வுக்­கும் அதி­க­மான கஞ்சா மீட்­கப்­பட்­டது.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என யாழ்ப்­பா­ணத்­தில் 29 பேரும், வவு­னி­யா­வில் 4 பேரும், மன்­னா­ரில் 4 பேரும், கிளி­நொச்­சி­யில் 3 பேரு­மாக 40 பேர் கைது செய்­யப்­பட்­டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11